Posts

ஆசை ஆசையாய்

மலையாய் இருந்திட விரும்பினேன்...... மருங்காமல் அனைத்தையும் தாங்குவதினால்...... மடுவாய் இருந்திட விரும்பினேன்..... மறுக்காமல் அனைத்தையும் தேக்குவதினால்...... மழையாய் இருந்திட விரும்பினேன்..... மண்ணுடன் அனைத்தையும் மகிழ்விப்பதினால்..... கடலாய் இருந்திட விரும்பினேன்..... காணும் இடமெல்லாம் பரவிக்கிடப்பதினால்..... காற்றாய் இருந்திட விரும்பினேன்..... காலமெல்லாம் உயிரனங்கள் ஸுவாசிப்பதினால்..... காட்டாற்று வெள்ளமாய் இருந்திட விரும்பினேன்..... கட்டுப்பாடின்றி எங்கும் பாய்ந்து செல்வதினால்..... தீயாய் இருந்திட விரும்பினேன்....... தீண்டியவற்றை சுட்டு எரிப்பதினால்...... மலராய் இருந்திட விரும்பினேன்...... மணங்களால் மனங்களை மகிழ்விப்பதினால்...... பறவையாய் பிறந்திட விரும்பினேன்...... பறந்து விரும்பிய இடங்களில் சிறகை விரிப்பதினால்.... ஆணாய் பிறந்திட விரும்பினேன்...... ஆணாதிக்கத்தை ஒழிக்கவேண்டி இருப்பதினால்..... பெண்ணாய் பிறந்துவிட்டேன் பெற்றோர் விரும்பியதினால்.... “பெண்ணா இவள்” என்று உலகம் வியக்க” !!!                                .... ஹேராம்....

எம்பிரான்

         "ஸ்ரீமதே ராமானுஜாய நம" * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *                            *எம்பிரான்! எம்பிரான்!*  எம்பிரான் ! எம்பிரான் ! எம்மை ஆளும் எம்பிரான்!                                                                   (2) எண்ணில் அடங்கா பெருமைகள்.... எங்கெங்கும் நின் புகழ்....                                                       (எம்பிரான்) எத்திராசர் நின் அருள்.... என்றென்றும் வேண்டினோம்.... எண்ண முடியா ஆசைகள்.... எண்ணிடாமல் காத்தருள்....                                                       (எம்பிரான்) எட்டு எட்டாய் வாழ்வினை.... எளிமையாய் உணர்த்தினாய்....                                                                                                           எட்டு எழுத்து மந்திரத்தை ....                  எட்டுதிக்கும் பரப்பினாய்....                                                                   (2)       எட்ட முடியா(த) மேன்மையை...               எட்டவைப்பாய் எம்மையும்.... எண்ணித் துணிந்த கருமங்கள்.... எண்ணிய வண்ணம் தந்தருள்....